Tuesday, March 28, 2017

தீயைத்தின்பவனின் குளிர்மை

குயில்களின் மொழிகளில்
மனம்மகிழ்வதில்லை இப்போது


மயில்களின் பரதங்களில்
மதிமயங்குவதில்லை இப்போது


மான்களின் மேனிவளைவுகளில்
மருண்டலைவதுமில்லை இப்போது


கயல்களின் கண்சிமிட்டல்களில்
காரியத்தைத்தொலைப்பதில்லை இப்போது


சுற்றியடிக்கும் சருகுக்காற்றுக்களுக்கு
சிரம்சரிந்துபோவதுமில்லை இப்போது


பற்றியெரியும் அக்கினிச்சுவாலையிலும்
பாதம் பதட்டம்கொள்ளாது இப்போது


உடலெரிக்கும் மின்சாரத்தையும் தாங்க
உறுதியெடுத்துவிட்டன நரம்புநார்கள் இப்போது


வடம்முறுக்கி தடம்பதித்து அடித்தாலும்
வளையாதிருக்கப்பழகிவிட்டன தசைகள் இப்போது


ஆனால் அத்தனை தாக்கமும்
உன்னைத்தாக்கினால் மட்டுமே
என் பிரபஞ்சம் நிலையிழந்துபோகும்

-வன்னியூர் செந்தூரன்–


No comments:

Post a Comment