Tuesday, April 4, 2017

காடு போய் நாடு போய் வீடு போனது

வீட்டின் விஞ்ஞாபனமெல்லாம்
விலையாகிப் போனதையா
கட்டியவன் எவனோ
காத்தவன் எவனோ
திட்டம் தீட்டியவனும் எவனோ–இன்று
கொட்டமிடுபவன் எவனோ

கட்டிய மேசனுமின்றில்லை
கல்லுத்தூக்கிய கூலியுமின்றில்லை
வாடகைக்கு வந்த பேடி
வக்கணையாய் பேசுதப்பா
கோடி மலை குவிக்கவெண்ணி
குலத்தையே அழிக்குதப்பா

யானை சிங்கம் வரக்கூடாதென
கட்டுவெடி கட்டிய காலமோ
கப்பலேறிப் போனதப்பா
யானையின் கூடாரமாய் இன்று
சோரம்போனது கூரையப்பா

சுற்றியுள்ள வாழைத்தோப்போ
கத்திக்கத்தி கதறுதப்பா
தந்திர நகர்வென்று மத்திரித்து மழுப்புதப்பா
சுடுகாட்டுச் சுந்தரியின் அந்தரப்புத்திஜீவி

யானை ஏதாவது போடுமென
வாலைக் கிழப்பிப் பார்த்து
வாய்பிளந்து நிற்குதப்பா
வந்தவழி மறந்த வானரங்களிங்கு

பழுப்பேறிய மூளைக்கு பாடை என்றோ..?
கறுப்பு கண்ணபிரானுக்கும் கதிரை ஆசையாமே
சுத்துமாத்து சுண்டி மோதிரத்தை
சூலத்தில் இறுக்கினாலே புண்ணியமாம்

வீட்டை விட்டு இடம்பெயர்தல் முறையல்ல
விசமிகளை அகற்று வீடு தூய்மைபெறும்
களனியை கைவிடாதே களைகளை பிடிங்கியெறி
வளமான போகத்தை அறிவாலே அமைத்துப்பார்.

–வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment