Tuesday, March 28, 2017

உலகை அறிந்து வை

உறவுகள் பலவிதம்
உணருவாய் ஒருகணம்
உழன்று மாறும் பிரம்மை
ஊள் உலகின் சொப்பனம்
காலநதி அள்ளிவரும்
கபட வித்துருக்கள்
காய்க்காது அன்புக்கனி
கதைபேசிப் பாய்ந்து
காலையும் வாரிவிடும்
கருமுள் விருட்சங்கள் -அவை
காலத்தால் கரைந்துவிடும்
கானல்நீர் ஈரங்கள்
உன்வானம் புகழ்மழை தூவ
பறைகள் முழங்கும்
பரிவட்டம் சூழும்
மின்னல்கள் வந்துபோகும்
மேகங்கள் சிலவுன்னை
விழுங்கிவிடக் காத்திருக்கும்
உன்குழலில் துடிப்பும்
மின்சார வெடிப்பும்
உயிரோடு உள்ளவரை
ஒளிரும் வண்ணக் குமிழ்கள்
வகையாக வசைபேசி
வானத்தையும் திருடிவிடும்
மின்வெட்டில் அணையும்
உன்கட்டில் நிலவுகூட
வாழ்க்கை வரம்பில்
வழிபார்த்து பாதம்வை
கருநாகமும் பீடைகளும்
காலடியில் ஒளிந்திருக்கும்
காவுகொள்ளக் காத்திருக்கும்
இடறி இம்சையடைந்தால்
மாமிச வாய்களும்
மந்திரத்தை உச்சரிக்கும்
விசநெருடி முட்களும்
வியாக்கியானம் பேசும்
சொறி நாய்களும் வந்து
சிம்மாசனம் கேட்கும்
நிலாப் பொட்டின் 
நிழல் வெடிப்புக்களில் 
நீச்சலடிக்கும் நிகழ் வண்டுகள் 
சூரிய உஷ்ணத்தில் 
சூடு தணிக்கும் 
எரிமலைப் பிளம்புகள் 
எரித்து உன்னை 
ஏப்பம்விட காத்திருக்கும் 
ஆகாயக் கீலங்கள் 
எல்லாம் ஓர்நாள் மாறும் 
மீண்டும் இயல்புநிலை காணும் 

.........." வன்னியூர் செந்தூரன் ......"





No comments:

Post a Comment