அருந்ததிக்கு ஆணைவைத்து
அம்புலிக்கு விடைகொடுத்து
பட்டமரம் ஒட்டியபின்
தட்டுவார் எனது மேனி
புனிதமான பந்தம்கண்டு நான்
பூரித்தும் மகிழ்ந்ததுண்டு
அதுவும் ஒரு காலம்
அம்புலிக்கு விடைகொடுத்து
பட்டமரம் ஒட்டியபின்
தட்டுவார் எனது மேனி
புனிதமான பந்தம்கண்டு நான்
பூரித்தும் மகிழ்ந்ததுண்டு
அதுவும் ஒரு காலம்
பஞ்சத்தை தொட்ட என்
பாழாய்ப்போன வீட்டுக்காரன்
விற்றுவிட்டான் என்னையும்
வீட்டோடு சேர்த்து ஒரு
விளங்காமல் போனவனுக்கு
பாழாய்ப்போன வீட்டுக்காரன்
விற்றுவிட்டான் என்னையும்
வீட்டோடு சேர்த்து ஒரு
விளங்காமல் போனவனுக்கு
அன்று முதல் எனக்கு
ஆரைச்சனியும் தொடங்கிற்று
அலங்கார விடுதியாய்
அரண்மனையும் ஆகிற்று
அருவருப்பும் கூடிற்று
ஆரைச்சனியும் தொடங்கிற்று
அலங்கார விடுதியாய்
அரண்மனையும் ஆகிற்று
அருவருப்பும் கூடிற்று
வகைவகையாய் வருவார்கள்
வண்ணவண்ண உடையணிந்து
ஆடைகள் எல்லாம்
அம்மணம் ஆனதால்
அருவருக்கிறது ஜடம்கூட
வண்ணவண்ண உடையணிந்து
ஆடைகள் எல்லாம்
அம்மணம் ஆனதால்
அருவருக்கிறது ஜடம்கூட
பஞ்சணையில் நெஞ்சமைத்து
பணத்தால் உடல்கழுவும்
பாதகரை தினம் பார்த்து
பதறுது இந்த ஜடம்
காசுத்தராசில்
கணத்துளி உழைப்பிடும்
கயவர்களை கண்டு இந்த
கட்டிலுமே கதறுகிறேன்
காப்பாற்ற வருவீரோ
கண்ணியமான மானிடரே ...?
...... "வன்னியூர் செந்தூரன்"...
பணத்தால் உடல்கழுவும்
பாதகரை தினம் பார்த்து
பதறுது இந்த ஜடம்
காசுத்தராசில்
கணத்துளி உழைப்பிடும்
கயவர்களை கண்டு இந்த
கட்டிலுமே கதறுகிறேன்
காப்பாற்ற வருவீரோ
கண்ணியமான மானிடரே ...?
...... "வன்னியூர் செந்தூரன்"...
No comments:
Post a Comment