உலக அநீதிகளுக்கு
ஒற்றைப் புள்ளியிட்ட
ஓர்மத் தீ ...
விடுதலை விடிவெள்ளி
கருமலைகள் கடந்தவன்
எரிமலையை வென்றவன்
துளியேனும் அஞ்சாதவன்
பழிபாவம் கொள்ளாதவன்
எழுத்தினால் புதுச்சரிதம்
இயம்பிவிட்டு போனவன்
.
ரவைகளால் அநீதியின்
அடியழித்து வாழ்பவன் .
சக்கரைக் கிண்ணத்தில்
இனிப்பை தூவிவிட்டவன் .
எக்கரை வாழும் போராளி
இதயத்திலும் இடமானவன் .
மருத்துவ மகான்
எழுத்தின் ஆயுதம்
புரட்சிப் பூகம்பம்
எளிமையின் எழுதா ஏடு ..
தலைவர்கள் பிறப்பதில்லை
தரணி உருவாக்குகிறது .
வீரர்கள் வீழ்ந்தாலும்
வரலாறாய் வாழ்வார்கள்
எத்தனை தேவர்கள்
வந்துதித்தார் எம்மண்ணில்
மறந்தாலும் மறையவில்லை
அவர் புகழும் இவன் போல ...
பொன்னிலம் காத்துநின்ற
தன்னலமில்லா அண்ணனின்
தரமான வீர விழுதுகளே
திண்ணமான உம் எண்ணம்
திடமான வரலாறு இங்கு
ஒற்றைப் புள்ளியிட்ட
ஓர்மத் தீ ...
விடுதலை விடிவெள்ளி
கருமலைகள் கடந்தவன்
எரிமலையை வென்றவன்
துளியேனும் அஞ்சாதவன்
பழிபாவம் கொள்ளாதவன்
எழுத்தினால் புதுச்சரிதம்
இயம்பிவிட்டு போனவன்
.
ரவைகளால் அநீதியின்
அடியழித்து வாழ்பவன் .
சக்கரைக் கிண்ணத்தில்
இனிப்பை தூவிவிட்டவன் .
எக்கரை வாழும் போராளி
இதயத்திலும் இடமானவன் .
மருத்துவ மகான்
எழுத்தின் ஆயுதம்
புரட்சிப் பூகம்பம்
எளிமையின் எழுதா ஏடு ..
தலைவர்கள் பிறப்பதில்லை
தரணி உருவாக்குகிறது .
வீரர்கள் வீழ்ந்தாலும்
வரலாறாய் வாழ்வார்கள்
எத்தனை தேவர்கள்
வந்துதித்தார் எம்மண்ணில்
மறந்தாலும் மறையவில்லை
அவர் புகழும் இவன் போல ...
பொன்னிலம் காத்துநின்ற
தன்னலமில்லா அண்ணனின்
தரமான வீர விழுதுகளே
திண்ணமான உம் எண்ணம்
திடமான வரலாறு இங்கு
No comments:
Post a Comment