Tuesday, March 28, 2017

"மடிந்த மனிதம் "

கரையைத் தேடிய
கட்டுமரங்கள் ..
மனிதத்தோடு வாழ்ந்த 
மறத்தமிழர்கள் ...
சுடுகுழல் பிசாசுகளுடன்
மன்றாடி மடிந்த நாட்கள்
பதவித்திரைகள்
பலமாய் மாற
பாவியுயிர்கள் பல
நிர்வாணக்கோலத்தில்
மாறிய தேசம்
மானத்தையிழந்து
மடிந்து விட்டபின்னும்
காணொளியில் எம்படங்கள்
விவாத அரங்கம் உலகில்
காலம் கடந்துவிட்ட பின் ....
மரணபூமியின் தீயில்
மண்ணோடு போன எம்
மாணிக்க மனங்களை
நினைக்கையில் தீயாய்
எம்மனம் கொதிக்குதம்மா.....
அதை மறக்க நினைக்கையில்
எம்முயிர் வலிக்குதம்மா .....

................."வன்னியூர் செந்தூரன் "........



No comments:

Post a Comment