உரப்பைச்சுவரும்
தேக்கங்கம்பியும்
தந்தவலிய தரையக
காவல் வீட்டில்
மெழுகுதிரிச்சிரசுகள்
உருகும் விடியும்வரை
தேச ஒளிக்காய்
தேக்கங்கம்பியும்
தந்தவலிய தரையக
காவல் வீட்டில்
மெழுகுதிரிச்சிரசுகள்
உருகும் விடியும்வரை
தேச ஒளிக்காய்
அக்கம்பக்கமெல்லாம்
மிருகங்களின் குடிமனை
அப்பப்போ பெய்யும்
அமிலமழையும் வேறு
இரும்புத்துருக்கற்றும்
எமையணைக்கலாம்
சொல் என் தோழி
உன் கனவு எது ..?
கேட்டது ஒரு நெருப்பு
மிருகங்களின் குடிமனை
அப்பப்போ பெய்யும்
அமிலமழையும் வேறு
இரும்புத்துருக்கற்றும்
எமையணைக்கலாம்
சொல் என் தோழி
உன் கனவு எது ..?
கேட்டது ஒரு நெருப்பு
சொட்டும் சங்கீதத்தில்
தட்டும் தாளத்திற்கு
மெட்டுப்போடும்
சலங்கைக் காலொன்று
சரிந்ததால் நான்
ஒற்றைக்காலில்..
அன்னைதேசம் ஒளிகாணவென்
ஆவியை உருக்குவேன்
ஆசை இது தான்..
தட்டும் தாளத்திற்கு
மெட்டுப்போடும்
சலங்கைக் காலொன்று
சரிந்ததால் நான்
ஒற்றைக்காலில்..
அன்னைதேசம் ஒளிகாணவென்
ஆவியை உருக்குவேன்
ஆசை இது தான்..
பலகாலம் வாழ்ந்திங்கு
பயனேதுமுண்டோ
பாரென் தோழி
சிலகாலம் வாழ்ந்தாலும்
சீர்தூக்கிப் புகழ்சூடி
உயிர்வாழும் வரலாற்றில்
பதிவேனே நிலையாகி..
தீவிழி உரைத்தாள்
மின்னல் புன்னகையுடன்..
பயனேதுமுண்டோ
பாரென் தோழி
சிலகாலம் வாழ்ந்தாலும்
சீர்தூக்கிப் புகழ்சூடி
உயிர்வாழும் வரலாற்றில்
பதிவேனே நிலையாகி..
தீவிழி உரைத்தாள்
மின்னல் புன்னகையுடன்..
மருதாணி முத்தமிட்ட
மங்கையின் மடலில்
எழுத்தாணி தவழ்ந்த
விரல்நுனித் திடலில்
உரிமையோடு ஒரு
உயிருண்ணும் இரும்பு
ஒட்டிக்கொண்ட மர்மமென்ன..?
மங்கையின் மடலில்
எழுத்தாணி தவழ்ந்த
விரல்நுனித் திடலில்
உரிமையோடு ஒரு
உயிருண்ணும் இரும்பு
ஒட்டிக்கொண்ட மர்மமென்ன..?
––––––––––வன்னியூர் செந்தூரன்–––––