Tuesday, March 28, 2017

இனியும் துயரமே

கறுப்பாடை உடுத்த
செவ்வீதி மேனி
வெறுப்பாடை தரித்த
நெறுப்பாற்றுக்காணி

திமிரான மிடுக்கு
தலைசாயக்கூடாதே
திடமான கனவு

ஒருநாளும் சாயாதே
அரசியல் அம்பலத்தில்
சிரசுகளின் அரங்கம்
பழசுகளின் நாமத்தினால்
பாவிகளின் பித்தலாட்டம்

கனவுகளைத்தொலைத்த
நிலவின் துண்டங்களை
அலசுதாமே அரசின்
ஆராட்சி மணிகள்

பிறைகளின் பின்னே
மறைந்த நெருப்புக்களை
செருப்புகள் தெருவில்
நகைக்குதாமே சரியா..?

-வன்னியூர் செந்தூரன்-


No comments:

Post a Comment