Tuesday, March 28, 2017

அடிப்படை ஏதடா..?

கரடான தரைமீது
கருக்கொண்ட கரும்பது
இனிக்காதென்று விதியில்லையே
காசு கொடுத்து வாங்கியதராசது
ஏழையின் எடையைக்குறைத்து என்றும்
பாகுபாட்டைப் புரிந்ததில்லையே
ஒய்யாரத்திற்கு ஓடி வியர்வை சிந்துவதற்கும்
ஓயாது உழைத்து வியர்வை ஓடுவதற்கும்
உடலியலில் ஒரே ஆரோக்கியக்கணக்கில்லையே
நெருப்பிலோ நீரிலோ மண்ணிலோ தேகம்
நிசம்தமடையும் ஆவியது காற்றாவதாய் ஐதீகம்
பஞ்சபூதங்களை விட மானிடனெவனும் மகானல்ல

– வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment