முல்லைநிலத்துத்தென்றலே
மௌனத்தை மறியலிடாதே
வல்லவீரத்து வளர்பிறைக்கடலே
மெல்லநீயும் சோர்ந்துபோகாதே
தசையுண்ணும் வசையோடு
பசித்திருக்கிறாயா ஈழமண்ணே
படுத்திருக்கும் உன்பிள்ளைகளைப்பார்
பஞ்சுமெத்தையல்ல பாடையம்மா
தேகமெரித்த தீரருடலில் அமிலத்தின்
தாகத்தடங்களைத் தடவிப் பாரம்மா
மானம் காத்த மறத்தியவள் மார்பை
வீணர்படை கறிசமைக்கிறார் ஏனம்மா
நந்திக்கடல் நீராடும் வெண்கொக்கே
முந்தையரின் பூர்வீகம் அழியும்கதையை
முத்தையன்கட்டு விராலின் காதிலோது
இனியாவது விராலோடு விலகாதிரு
மண்டியிடாதவீரம் மண்ணாகினாலும்
மறவர்குழலின் சீற்றம் தணியாதம்மா
திம்பிலிப்பற்றைக்குள் பல தியாகங்கள்
திருடப்பட்டு மறைக்கப்படும் நாளை
புகைமண்டலங்களை சுவரிட்டிருக்கும்
வட்டுவாகல் வானமே நீயறிவாயா
கொத்துக்கொத்தாய் குழவிகள்
கத்தியழியும் கொடூரத்தின் அரங்கத்தை
அனுதாபக்கிறுக்கல்கள் நாளை
அரங்கேறும் சபையெங்கும் அறிவோம்
அர்த்தமற்ற பேச்சுக்களால் இனத்தை
அழிப்பார் எதிரியின் பீடைகள் கவனம்
எங்களின் மரணத்தின் மேலாவது
வலுப்பெறட்டும் மறைக்கப்பட்டதேசம்
ஊனத்தைத்தின்றாவது ஞாலம்
ஈகத்தில் எழும்ஈழம் மலர்ச்சி பெறட்டும்
-வன்னியூர் செந்தூரன்-
முல்லைநிலத்துத்தென்றலே
மௌனத்தை மறியலிடாதே
வல்லவீரத்து வளர்பிறைக்கடலே
மெல்லநீயும் சோர்ந்துபோகாதே
மௌனத்தை மறியலிடாதே
வல்லவீரத்து வளர்பிறைக்கடலே
மெல்லநீயும் சோர்ந்துபோகாதே
தசையுண்ணும் வசையோடு
பசித்திருக்கிறாயா ஈழமண்ணே
படுத்திருக்கும் உன்பிள்ளைகளைப்பார்
பஞ்சுமெத்தையல்ல பாடையம்மா
பசித்திருக்கிறாயா ஈழமண்ணே
படுத்திருக்கும் உன்பிள்ளைகளைப்பார்
பஞ்சுமெத்தையல்ல பாடையம்மா
தேகமெரித்த தீரருடலில் அமிலத்தின்
தாகத்தடங்களைத் தடவிப் பாரம்மா
மானம் காத்த மறத்தியவள் மார்பை
வீணர்படை கறிசமைக்கிறார் ஏனம்மா
தாகத்தடங்களைத் தடவிப் பாரம்மா
மானம் காத்த மறத்தியவள் மார்பை
வீணர்படை கறிசமைக்கிறார் ஏனம்மா
நந்திக்கடல் நீராடும் வெண்கொக்கே
முந்தையரின் பூர்வீகம் அழியும்கதையை
முத்தையன்கட்டு விராலின் காதிலோது
இனியாவது விராலோடு விலகாதிரு
முந்தையரின் பூர்வீகம் அழியும்கதையை
முத்தையன்கட்டு விராலின் காதிலோது
இனியாவது விராலோடு விலகாதிரு
மண்டியிடாதவீரம் மண்ணாகினாலும்
மறவர்குழலின் சீற்றம் தணியாதம்மா
திம்பிலிப்பற்றைக்குள் பல தியாகங்கள்
திருடப்பட்டு மறைக்கப்படும் நாளை
மறவர்குழலின் சீற்றம் தணியாதம்மா
திம்பிலிப்பற்றைக்குள் பல தியாகங்கள்
திருடப்பட்டு மறைக்கப்படும் நாளை
புகைமண்டலங்களை சுவரிட்டிருக்கும்
வட்டுவாகல் வானமே நீயறிவாயா
கொத்துக்கொத்தாய் குழவிகள்
கத்தியழியும் கொடூரத்தின் அரங்கத்தை
வட்டுவாகல் வானமே நீயறிவாயா
கொத்துக்கொத்தாய் குழவிகள்
கத்தியழியும் கொடூரத்தின் அரங்கத்தை
அனுதாபக்கிறுக்கல்கள் நாளை
அரங்கேறும் சபையெங்கும் அறிவோம்
அர்த்தமற்ற பேச்சுக்களால் இனத்தை
அழிப்பார் எதிரியின் பீடைகள் கவனம்
அரங்கேறும் சபையெங்கும் அறிவோம்
அர்த்தமற்ற பேச்சுக்களால் இனத்தை
அழிப்பார் எதிரியின் பீடைகள் கவனம்
எங்களின் மரணத்தின் மேலாவது
வலுப்பெறட்டும் மறைக்கப்பட்டதேசம்
ஊனத்தைத்தின்றாவது ஞாலம்
ஈகத்தில் எழும்ஈழம் மலர்ச்சி பெறட்டும்
வலுப்பெறட்டும் மறைக்கப்பட்டதேசம்
ஊனத்தைத்தின்றாவது ஞாலம்
ஈகத்தில் எழும்ஈழம் மலர்ச்சி பெறட்டும்
-வன்னியூர் செந்தூரன்-
No comments:
Post a Comment