இனிமையைத்தொலைத்த
தனிமைத்தெருவிலே தவிப்பவனே
இனியாவது இளமையை விடியல் செய்
கனிமடியின் காலத்தில் காரியம் செய்
தனிமைத்தெருவிலே தவிப்பவனே
இனியாவது இளமையை விடியல் செய்
கனிமடியின் காலத்தில் காரியம் செய்
தெருவளையும் சுழிவுகளிலும்
தீராதவுறுதியை திடம்செய்பவனே
மானிடத்தின் மகிமையை படையல் செய்
வீணடித்த உறவுகளை விலக்கல் செய்
தீராதவுறுதியை திடம்செய்பவனே
மானிடத்தின் மகிமையை படையல் செய்
வீணடித்த உறவுகளை விலக்கல் செய்
நன்மை தீமை நரகம் சொர்க்கமெல்லாம்
நாம் வகுத்த விதியென மொழி உரைப்பவனே
நீ செய்த தவறுக்காய் நித்தம் வருந்தாதே
நடந்த பாதையில் கடந்த முட்களை மனதிலேற்று
நாம் வகுத்த விதியென மொழி உரைப்பவனே
நீ செய்த தவறுக்காய் நித்தம் வருந்தாதே
நடந்த பாதையில் கடந்த முட்களை மனதிலேற்று
நிரந்தரமற்ற பூலோகவாழ்வதில் உயிரதே மாயையே
புகழென்ன உயர்வென்ன புரியாத போதை தான்
இகழ்வோரைக்கண்டு சினம் கொள்ளாதே
புகழ்வோரை சற்றுப்புறந்தள்ளிப் புத்திகொள்
புகழென்ன உயர்வென்ன புரியாத போதை தான்
இகழ்வோரைக்கண்டு சினம் கொள்ளாதே
புகழ்வோரை சற்றுப்புறந்தள்ளிப் புத்திகொள்
– வன்னியூர் செந்தூரன்–
No comments:
Post a Comment