Tuesday, March 28, 2017

இனிமையைத்தொலைத்த


இனிமையைத்தொலைத்த
தனிமைத்தெருவிலே தவிப்பவனே
இனியாவது இளமையை விடியல் செய்
கனிமடியின் காலத்தில் காரியம் செய்

தெருவளையும் சுழிவுகளிலும்
தீராதவுறுதியை திடம்செய்பவனே
மானிடத்தின் மகிமையை படையல் செய்
வீணடித்த உறவுகளை விலக்கல் செய்

நன்மை தீமை நரகம் சொர்க்கமெல்லாம்
நாம் வகுத்த விதியென மொழி உரைப்பவனே
நீ செய்த தவறுக்காய் நித்தம் வருந்தாதே
நடந்த பாதையில் கடந்த முட்களை மனதிலேற்று

நிரந்தரமற்ற பூலோகவாழ்வதில் உயிரதே மாயையே
புகழென்ன உயர்வென்ன புரியாத போதை தான்
இகழ்வோரைக்கண்டு சினம் கொள்ளாதே
புகழ்வோரை சற்றுப்புறந்தள்ளிப் புத்திகொள்

– வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment