Wednesday, March 29, 2017

நம்பிக்கை அதிகாரத்தில்

நம்பிக்கை அதிகாரத்தில்
நலிந்தே போகும் நாட்கள்

வெந்துபோன காயங்களில்
தந்திர மருந்தாகும் மாயங்கள்

ஈரமான தேகத்தின் இடுக்குகளை
இடுகாடுகள் முற்றுகையிடுகின்றன

கைதியின் சாசனங்கள் என்றும்
கம்பிக்கதவைத் தாண்டாது போல

கரிசல்களின் கரிசனை கூட
கருவேப்பாய் வாழ்ந்திருக்கும்

வன்னியூர் செந்தூரன்


No comments:

Post a Comment