கிரகம் தாண்டும் விரகத்தவிப்பை
கிரகிக்கத்தெரியாத சூரியனில்லை
நரகம் கொல்லும் துளிகளைத்தின்னும்
மனிதத்திலொருவனே நானுமென்பதுமறிவாய்
நீ மௌனத்தில் உண்ட மொழிகளிலெல்லாம்
என்மனதைத் தடவிச்சென்றிருக்கிறாய்
விழிபிதுங்கிய எதிர்பார்ப்புக்களிலெல்லாம்
என் அலைமனதை அமைதியாக்கியிருக்கிறாய்
குமரியென்பவளை குழந்தையாக்கி
மழலைச்சுவையை புகட்டிய பள்ளியறை நீ
சினமானவுன் கோபச்சொற்கள் கூட
சிரிப்பை பிச்சையிட்டிருக்கின்றன பலநாட்கள்
எல்லைக்கோடு வரையப்படாத எழுதுகோலுக்கு
அழகிய நந்தவனத்தைப் பரிசளித்தவள் நீ
பற்றிக்குமுறியெரிந்த அக்கினிச்சுவாலையில்
அரணிட்டு குளிர்மைதந்த குற்றாலம் நீ
பறவையின் சிறகுகளைக் கட்டிவிட்டு மகிழென்கிறாய்
சிறகறுப்பதே சிறப்பென்றால் கத்தியைத் தீட்டிவை
கயிற்றை அவிழ்ப்பதோ கடினமல்ல ..ஆனால்
அதற்கு அன்பென்ற அடையாளமிட்டிருக்கிறாயே..¡
– வன்னியூர் செந்தூரன்–
கிரகிக்கத்தெரியாத சூரியனில்லை
நரகம் கொல்லும் துளிகளைத்தின்னும்
மனிதத்திலொருவனே நானுமென்பதுமறிவாய்
நீ மௌனத்தில் உண்ட மொழிகளிலெல்லாம்
என்மனதைத் தடவிச்சென்றிருக்கிறாய்
விழிபிதுங்கிய எதிர்பார்ப்புக்களிலெல்லாம்
என் அலைமனதை அமைதியாக்கியிருக்கிறாய்
என்மனதைத் தடவிச்சென்றிருக்கிறாய்
விழிபிதுங்கிய எதிர்பார்ப்புக்களிலெல்லாம்
என் அலைமனதை அமைதியாக்கியிருக்கிறாய்
குமரியென்பவளை குழந்தையாக்கி
மழலைச்சுவையை புகட்டிய பள்ளியறை நீ
சினமானவுன் கோபச்சொற்கள் கூட
சிரிப்பை பிச்சையிட்டிருக்கின்றன பலநாட்கள்
மழலைச்சுவையை புகட்டிய பள்ளியறை நீ
சினமானவுன் கோபச்சொற்கள் கூட
சிரிப்பை பிச்சையிட்டிருக்கின்றன பலநாட்கள்
எல்லைக்கோடு வரையப்படாத எழுதுகோலுக்கு
அழகிய நந்தவனத்தைப் பரிசளித்தவள் நீ
பற்றிக்குமுறியெரிந்த அக்கினிச்சுவாலையில்
அரணிட்டு குளிர்மைதந்த குற்றாலம் நீ
அழகிய நந்தவனத்தைப் பரிசளித்தவள் நீ
பற்றிக்குமுறியெரிந்த அக்கினிச்சுவாலையில்
அரணிட்டு குளிர்மைதந்த குற்றாலம் நீ
பறவையின் சிறகுகளைக் கட்டிவிட்டு மகிழென்கிறாய்
சிறகறுப்பதே சிறப்பென்றால் கத்தியைத் தீட்டிவை
கயிற்றை அவிழ்ப்பதோ கடினமல்ல ..ஆனால்
அதற்கு அன்பென்ற அடையாளமிட்டிருக்கிறாயே..¡
சிறகறுப்பதே சிறப்பென்றால் கத்தியைத் தீட்டிவை
கயிற்றை அவிழ்ப்பதோ கடினமல்ல ..ஆனால்
அதற்கு அன்பென்ற அடையாளமிட்டிருக்கிறாயே..¡
– வன்னியூர் செந்தூரன்–
No comments:
Post a Comment