இரு ஒளிவண்டு விழிகள்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
என் உலகமுமல்லவா அதில்
சுழன்றாடிக்கொண்டிருக்கிறது
வானவில்லின் வடிவிலே
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்
தங்கக்கன்னங்களில்
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..
வெண்பனி முத்துக்களூடே
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது
ரோஜாப்பூந்தோட்டம்
பொன்னைத்தாங்கியபடி
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு
துள்ளிடும் இவள் துடியிடையில்
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு
வண்ணமடி இவள் அழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு
சொர்க்கத்தைத் தேடிய எனக்கு
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...
என்வீட்டுச்சுவரில்
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து
–வன்னியூர் செந்தூரன்–
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
என் உலகமுமல்லவா அதில்
சுழன்றாடிக்கொண்டிருக்கிறது
வானவில்லின் வடிவிலே
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்
தங்கக்கன்னங்களில்
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..
வெண்பனி முத்துக்களூடே
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது
ரோஜாப்பூந்தோட்டம்
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது
ரோஜாப்பூந்தோட்டம்
பொன்னைத்தாங்கியபடி
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு
துள்ளிடும் இவள் துடியிடையில்
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு
வண்ணமடி இவள் அழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு
சொர்க்கத்தைத் தேடிய எனக்கு
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...
என்வீட்டுச்சுவரில்
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து
–வன்னியூர் செந்தூரன்–
No comments:
Post a Comment