பறந்த சருகில்
கருகிய காயமாம்
இறந்த உணர்வில்
பறந்த இரத்தக்கறையாம்
குமட்டியபடி குழந்தை
குதம்வழியே கூர்வாள்
பதமாக்கிய பட்டாளம்
குமரியின் குலமறுத்தவோலம்
நரம்பு கிழிந்த பறவை
நவரசநாட்டிய இயலாமை
தவமாகிக்காட்டிய தராசின்
சவக்கால ஆராதனைப்பசி
சித்தம் கலங்கிய சத்தத்தின்
முற்றுமறிந்த வித்தகநிலை
பத்தும் மறந்த கதையறியாது
வித்தாகிப் போயாக முடியாதே
-வன்னியூர் செந்தூரன்-
No comments:
Post a Comment