Wednesday, March 29, 2017

"இல்லை"

காலில் செருப்பில்லை
கனல் வெயிலுறங்கவில்லை

பையில் பணமில்லை
பரிகசிப்பார் யாருமில்லை

கற்களும் முட்களும்
காலை வருத்தவில்லை

பாறைகள் மோதினாலும்
பாதத்திற்கு வலிக்கவில்லை

உண்ண உணவில்லை
உதவுவார் எவருமில்லை

என் பிள்ளை உயிரோடில்லை
ஏனெனக்கேட்க யாருமில்லை

இல்லாளும் இங்கில்லை
இறையும் விழிக்கவில்லை

ஊர்போக வழியில்லை
ஊமை வாய்திறக்க துணிவில்லை

போர் முடிந்த பின்னும்
போர்ரணவலிகள் மாறவில்லை

-வன்னியூர் செந்தூரன்-


No comments:

Post a Comment