Tuesday, March 28, 2017

மாறுமா..? மீறுமா..?

பரந்த தேசமது புலருமோ- இடி
விழுந்த பாலையில் ஈரமூறுமோ
தறியிழந்த கதிரையில் கனதியோ- முடி
நரைத்த மூளைக்கு முடிதகுமோ

அரசியல் அத்திவாரம் ஆகமமோ
கரகாட்டக்கதையில் தெருக்கூத்தோ
களமோடுகாலங்கள் கானலிலோ
வளமோடு வாழ்ந்ததை மறந்தீரோ

பலமோடு மேதாவம் தாண்டவமோ
கலியோடு மேலாண்மை ஆண்டிடவோ
பலகாலம் வலியோடி நிமிர்ந்தமரம்
சலசலப்பில் சிரமென்றும்சாய்ந்திடாதே...

-------வன்னியூர் செந்தூரன்-----


No comments:

Post a Comment