Tuesday, March 28, 2017

சாட்சி ......

வீரச் சாட்சி
வாளின் விளிம்பில்
வழியும் இரத்தம்
காதற் சாட்சி
விழியினோரம்
கசியும் ஊற்று
பெண்மைச் சாட்சி
மாதம் ஒழுங்கு
மலரும் விலக்கு
தரிக்கும் தாய்மை
கற்புச் சாட்சி
கட்டில் மேல்
கசங்கும் சேலை
காணும் யோகம்
கடவுள் சாட்சி
கையுயர்த்தும்
தெருப்பிச்சையின்
வதனச் சிரிப்பு
தர்மச் சாட்சி
ஏழை எளியவர்
கண்ணீர் கிழித்த
சாதமிடும் கெட்டவன்
கல்விச் சாட்சி
கிழிந்த புத்தகப்பை
குருவின் பழைய
பிரம்படித் தழும்புகள்
மரணத்தின் சாட்சி
மாத முடிவில்
ஊர் விருந்து
சுவரில் தொங்கும்
நினைவுப்படம்
யுத்தத்தின் சாட்சி
உக்கிப்போன எலும்புகள்
மக்கிப்போன உடலணுக்கள்
உயிர்குடித்த உலோகங்களின்
சமதுயில் சாபத்துடன் .........

(வன்னியூர் செந்தூரன் )

No comments:

Post a Comment