Tuesday, March 28, 2017

இதைத்தான் சொல்வேன்

முத்துவரிகளுக்கான சொத்தை இழந்து
பித்துப்பிடித்தது போல சிதறுண்டு
கத்தியழும் மனவெளியே அமைதிபெறு..



காலத்தைப் பதிவிட்ட உணர்வுக்கருவொன்று
ஞாலத்தில் சேவைக்கு முற்றுப்புள்ளியிடுகிறது.
நம்பிக்கை தந்தவனின் கையினி பேனாதொடாது.

இதயமுடைந்து அஞ்சலியிடும் அன்பர்களே.!
இளவலின் படைப்புகளை இயங்குநிலையாக்குங்கள்
இவனுயிர் உண்மையிலுறையும் உலகமதுதான்.

வாழும் போது துயரத்தை மறைத்திருப்பான்
மானிடத்திற்கு மகிழ்வை பரிசளித்திருப்பான்
மறைந்தும் மறையாது வாழ்ந்துகொண்டிருப்பான்

கவிஞர் நா.முத்துக்குமார் அண்ணாவின் கலை ஆத்மா தெய்வீகம் பெறட்டும்.
குறிப்பு– நான் முன்பொருமுறை தமிழகம் வந்தபோது உங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது நீங்கள் அவசர வேலைகளில் இருந்தீர்கள் . மூன்று நாளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் . காத்திருங்கள் என்றீர்கள். ஆனால் அடுத்த நாளே நான் ஈழத்துக்கு வரவேண்டியிருந்ததால் உங்களை சந்திக்கமுடியவில்லை என்பது மனவருத்தமே இன்று..


No comments:

Post a Comment